நடிகர் கமல்ஹாசன் யாம் மன்னரில்லை, முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்று வசனங்களை அள்ளி தெரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என்று கருத்து தெரிவித்தார். இதற்கு அமைச்சர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, மனதளவில் உன்னைப் போன்று யாம் மன்னரில்லை தோற்றிறந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த பதிவு பார்த்தால் அவர் அரசியலுக்கு வருவார் என தெரிகிறது. இந்த செய்தி வைரலாகி வருவதோடு, சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.