நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் டிடிவி தினகரன்!

thinakarn

நீட் தேர்வு காவு கொண்ட அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கோரி, நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் வருகிற 9-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு எவ்வளவு திறமை இருந்தும் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. சமூக நீதியை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் அ.தி.மு.க அம்மா அணியின் மாணவர் பிரிவினர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பார்கள்’ என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Response