பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாணப் போராட்டம்..

 

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள தெலங்கு திரைப்பட அலுவலகத்துக்கு வந்தார். திடீரென தனது ஆடைகளை களைந்து அரை நிர்வாணக் கோலத்தில் அலுவலகத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தன்னையும், சக நடிகைகளையும் சில இயக்குநர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சிப்பதையும், பாலியல் ரீதியாக பயன்படுத்த முயல்வதையும் கண்டித்து நடிகை ஸ்ரீ ரெட்டி கோஷமிட்டார்

தெலுங்கு திரை உலகில் சில முன்ணனி நடிகர்களும், இயக்குநர்களும் நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இதற்காக நடிகைகளுக்கு மனரீதியான அழுத்தத்தை கொடுக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்தில் பிறந்து, தெலுங்கு பேசும் பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தெலுங்கு திரைப்பட சங்கத்தில் என்னை உறுப்பினராக சேர்க்க வேண்டும். நான் இதுவரை 3 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பதற்கு வாய்ப்பு தேடிச்சென்றால் என்னை தவறான கண்ணோட்டத்தில் இயக்குநர்கள் அணுகிறார்கள். பெண்கள் வாழ்க்கை விளையாட்டுப்பொருளா?. நான் ஜனநாயக முறையில்தான் போராட்டம் நடத்தினேன். எந்தவிதத்திலும் யாரையும் என் போராட்டம் பாதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

 

Leave a Response