அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் தினகரன் ஆதரவு அணியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.ஏல்.ஏ சந்திரபிரபா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அமைச்சர்களும், எம்.ஏல்ஏ.க்களும் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.
அதனை தொடர்ந்து:-
திண்டுகல் சீனிவாசன் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இருப்பதாக முன்மொழிந் தீர்மானத்தை ஆதரிப்பதாக 109 எம்.எல்.ஏக்கள் அறிவித்ததை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.