குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதி கோவை மத்திய சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
தன் மீதான குண்டர் சட்டத்தை உடனே திரும்பப்பெற வேண்டுமென்று வளர்மதி வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் தன்னை பார்க்க வருவோரை மிரட்டும் உளவுத்துறையினர், சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹைட்ரோகார்பன், பெட்ரோ கெமிக்கல் போன்ற திட்டங்களை உடனே கைவிட வேண்டும் என்று வளர்மதி வலியுறுத்தியுள்ளார்.