முருகனுக்கு சிறைக்குள் ஜீவசமாதி !

murugan-39898-26-1501069320
முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், தன்னை விடுதலை செய்யுமாறு பல போராட்டங்கள் செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இறுதியில் ஆன்மிகத்தின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.
Murugan-eats-food-one-time-in-Vellore-jail_SECVPF
பின்னர் ஜடா முடியுடன் காவி உடையணிந்து சாமியார் போல் தோற்றத்தில் உள்ள முருகன் தான் ஜீவ சமாதி அடையப்போவதாக
சிறைத்துறைக்கு மனு ஒன்றை அளிதத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் 18 ஆம் தேதி முதல் உணவு உண்ணாமல் கடவுளை நினைத்து தியானத்தில் அமர்ந்து ஜீவசமாதி அடையப்போவதாக முருகன் தெரிவித்துள்ளார். இதற்கு கருத்துத் தெரிவித்த ஜெயிலர் சண்முகசுந்தரம் சிறையில் உணவு உண்ணாமல் இருப்பது குற்றம் எனவும், முருகன் அவ்வாறு செய்தால் அவருக்கு சிறையில் கிடைக்கும் சலுகைகள் வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.

Leave a Response