சுதந்திர தினத்தில் இப்படி ஒரு அசம்பாவிதமா? என்ன கொடும சார் இது

paark 2
சண்டிகரில், நேற்று சுதந்திர தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய, 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள, பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பொது தலைநகரான சண்டிகரில், உள்ள பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்று திரும்பிய, 8ம் வகுப்பு படிக்கும், 12 வயது மாணவியை, ஒருவன் திடீரென வழிமறித்தான். கத்தியைக் காட்டி மிரட்டிய அவன், அந்த மாணவியை, அருகிலுள்ள பூங்காவுக்குள் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளான்.

பட்டப்பகலில், அதிக போக்குவரத்து இல்லாத பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து, மாணவி, பெற்றோரிடம் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response