பலாத்காரத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்த மக்கள்!

imolestation

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நகர போலீசார் கூறுகையில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர், 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

கையில் காசு இல்லாததால், எதுவும் சாப்பிடாத நிலையில் பலவீனமாக விசாகப்பட்டின ரயில் நிலையம் அருகேயுள்ள மரத்தடியில் படுத்து கிடந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி கிளீனர் கன்ஜி சிவா(25) என்பவர், போதையில் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பலவீனமாக இருந்த அவரால் எதிர்க்கவும் முடியாமல், சத்தம் போடவும் முடியாமல் இருந்துள்ளார்.

புகார் அந்த வழியாக நடந்து சென்றவர்கள், பலாத்காரம் செய்வதை கண்டு கொள்ளவில்லை. ஒரு சிலர் தாங்கள் வைத்திருந்த மொபைலில் படம் பிடிக்க துவங்கினர். ஸ்ரீனு என்ற ஆட்டோ ஓட்டுநரும் தனது மொபைலில் படம் பிடித்து போலீசில் புகார் செய்தார்.

images (1)
அவரும், சம்பவத்தை தடுக்க முயற்சி செய்யவில்லை. இதனையடுத்து அங்கு சென்று, சிவாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து 2 வார நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Leave a Response