ஆகஸ்ட் 15 ஒருநாள் மட்டும் மதுபான கடைகளுக்கு தடா

baanam
சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகள், ஹோட்டல்கள் அவை சார்ந்த பார்கள் ஆகியவற்றை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவை மீறி விற்பனை செய்தால், மதுபான விதிமுறைகளின் படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Response