பள்ளிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடர் விரைவில் தொடக்கம்

cricket ground
பள்ளி மாணவர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் விதமாக இந்தியன் வங்கி சார்பில் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையே டி 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட உள்ளது.

இந்தத் தொடருக்கான கோப்பைகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநர் கிஷோர் காரத் செயல் இயக்குநர்கள் ஏ.எஸ்.ராஜிவ், எம்.கே.பட்டாச்சார்யா, பொது மேலாளர் மணிமாறன் ஆகியோர் பங்கேற்று கோப்பைகளை அறிமுகப்படுத்தினர்.

இந்த கிரிக்கெட் தொடர் வரும் 16-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை லயோலா கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. தொடரின் இறுதியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் தொடர் நாயகன் கோப்பையும் வழங்கப்பட உள்ளன. இதுதவிர்த்து ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட உள்ளது.

Leave a Response