கடந்த ஏப்ரல் மாதம் ஓபிஎஸ்-க்கு 8 துணை ராணுவத்தினரைக் கொண்ட ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி திருச்சி விமான நிலையத்தில் சோலைராஜன் என்பவர் ஓபிஎஸ்ஸை கத்தியால் குத்த முயற்சித்திருக்கிறார்.
இது ஓபிஎஸ் ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்து ஓபிஎஸ்-க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க கோரி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் விரைவில் அவரது ஆதரவாளர்கள் மனு அளிக்க கூடும் என கூறப்படுகிறது.