அதிமுகவை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கும் தினகரன் அதிமுக அம்மா கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். ஆனால் இந்த நியமனங்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
எம்.எல்.ஏக்கள் ஏ.கே. போஸ், சத்யா பன்னீர்செல்வம், காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் ஆகியோர் தினகரன் தந்த பதவிகள் தங்களுக்கு தேவையில்லை என போர்க்கொடி தூக்கியிருந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு தம்மை மருத்துவ அணி இணை செயலராக நியமித்ததை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.
மேலும் தாம் எம்.எல்.ஏ.வாக இருந்து பணி செய்தாலே போதும்; தினகரனின் கட்சியை கைப்பற்றும் முயற்சிக்கு துணை போக முடியாது எனவும் கூறினார்.