அஸ்வின், ஜடேஜா சுழல் பந்தில் சுருண்ட இலங்கை!

sl-vs-ind

இரண்டாம் டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைப்பெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 9விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து டிக்லெர் செய்தது.

இலங்கைக்கு எதிராக 2வது ஓவரை அஸ்வினை பவுலிங் செய்ய வைத்தார் கோலி. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 50 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வினின் சுழலில் 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சமி அவரது பங்கிற்கு வேகத்தால் மிரட்டி 2 வீரர்களை போல்டாக்கினார். அஸ்வின் மீண்டும் தனது சுழல் சூறாவளியால் விக்கெட்டுகளை 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Jadeja-Ashwin

இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Leave a Response