அந்தியூரில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!

eye_test_2689697f
அந்தியூரை அடுத்த, பர்கூர்மலை கொங்காடை கிராமத்தில், ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், நாளை காலை, 10:00 மணிக்கு, காவல்துறை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. கண் தொடர்புடைய அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்காக வருவோர், வாக்காளர் அட்டை அல்லது ஆதார் அட்டை நகல் எடுத்துவர வேண்டும். பர்கூர் மலைப்பகுதி மக்கள், முகாமை பயன்படுத்திக் கொள்ள, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Response