சிறுத்தையின் நடமாட்டத்தால் உயிர் பயத்தில் தவிக்கும் வால்பாறை குடியிருப்பு பகுதி மக்கள்!

cheeta
கோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி வருகிறது. இதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை புது மார்க்கெட் பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வால்பாறை டவுனில் உளள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே சிறுத்தை நடமாட்டம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்களை தாக்குவதற்கு மன் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்பது குடியிருப்புவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Response