சங்கராபள்ளியில் தீ விபத்து 57 வீடுகள் நாசம்!

thi

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சக்கராபள்ளியில் இன்று காலை 3 மணிக்கு ஒருவரது வீட்டில் தீ பிடித்தது. காற்றின் வேகத்தில் அடுத்தடுத்த வீடுகளில் தீ மளமளவென்று பரவியது. இதில் வீடுகளில் இருந்த சிலிண்டர்கள் வெடித்ததில் தீயின் தீவிரம் அதிகரித்து தொடர்ச்சியாக அடுத்தடுத்த 57 வீடுகள் தீ பற்றி எரிந்து வீடுகள் நாசமாகின. குப்பை மேட்டில் பற்றிய தீ வீடுகளில் பரவி இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகித்துள்ளனர்.

திருவையாறு, திருகாட்டுபள்ளி, கும்பகோணம் பகுதிகளில் இருந்து வந்த 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்ட ஆட்சியினர் அண்ணாதுரை ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ரூ.10,000, அரிசி, வேஷ்டி, சேலை ஆகியவை நிவாரணமாக வழங்கியுள்ளனர்.

Leave a Response