8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை விமானப்படைத்தளத்தில் இருந்து மீட்டுள்ளனர்!

python
ஆக்ரா அருகேயுள்ள இந்திய விமானப்படை தளத்தில் சுமார், 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட இந்த மலைப்பாம்பு தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு காட்டிற்குள் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானப்படைத்தளத்தில் நின்றுக் கொண்டிருந்த ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானத்தின் குறுகிய பகுதியில் இந்த மலைப்பாம்பு நெளிந்துக் கொண்டிருந்ததை கண்ட ஊழியர்கள் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் குறுகிய பகுதிக்குள் மலைப்பாம்பு இருந்ததால் அதன் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 5 மணி நேரம் காத்திருந்து பாம்பை பத்திரமாக மீட்டதாக மீட்பு பணி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக விமானத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தில் மலைப்பாம்பு புகுந்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

Leave a Response