திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்க உள்ளதாக உலகின் மிகப் பெரிய பல்கலைகழகமான, இக்னோ என்று அழைக்கப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இத்தகவலை இக்னோ பல்கலைக்கழகத்தில், நேற்று நடந்த விழாவில் பேசிய துணைவேந்தர் ரவீந்திர குமார் அறிவித்தார்.