பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சியிடம் ஆட்டோவில் வழிப்பறி!..

kottaachchi
சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த நடிகர் கொட்டாச்சி. இவர் ஈரோடு அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார். பின் சென்னை திரும்புவதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த கொட்டாச்சியை சாமர்த்தியமாக பேசி, தனியார் டிராவல்சுக்கு அழைத்துச்செல்வதாக கூறி ஒரு நபர் ஆட்டோவில் அழைத்துச்சென்றார்.

ஆனால், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ செல்வதை அறிந்த கொட்டாச்சி, மற்றொரு நடிகரை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் ஆட்டோவில் வந்த நபர், திடீரென கொட்டாச்சியின் செல்போன், 2 சவரன் நகை, பர்சையும் பறித்துவிட்டு, அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் மீண்டும் தனது நண்பரான பெஞ்சமினின் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து சூரமங்கலம் காவல்நிலையத்தில் கொட்டாச்சி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response