ஆட்டோ சேர் ஆட்டோவா இனி ஆப்புதான் !

auto 3
விதி மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பாலமுருகன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆட்டோவை ஷேர் ஆட்டோவாக பயன்படுத்தினால் ஓட்டுனரின் உரிமத்தை ரத்து செய்யலாம்.

ஜூன் மாதம் வரை விதி மீறலில் ஈடுப்பட்ட ஆட்டோக்கள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டல போக்குவரத்து அலுவலர்கள் அறிக்கை தர உத்தரவிட்டு வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Response