இந்தியா-இலங்கை டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது!

sl-vs-ind

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி கடைசியாக விளையாடிய 7 டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி இருந்தது. இதனால் இந்த சாதனையை விராட் கோலி அணி தொடர்ந்து நீடிக்க செய்யும். என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014-15 ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. அதன் பிறகு 8 டெஸ்ட் தொடரில் ஆடிவிட்டது.

ஆனால் தொடரை இழக்காமல் சிறப்பாக ஆடி வருகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இதே நிலைமை நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி கடைசியாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் தற்போது மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

shikhar-dhawan-and-abhinav-mukund

தொடக்க வீரர் ராகுல் காயம் காரணமாக நாளைய டெஸ்டில் ஆடமாட்டார். ஏற்கனவே முரளி விஜய் காயத்தால் விலகி இருந்தார். இதனால் தவானும், தமிழக வீரர் அபினவ் முகுந்தும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். கேப்டன் விராட் கோலி நல்ல நிலையில் இருப்பதால் இந்த டெஸ்ட் தொடரில் முத்திரை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response