ரயில் சேவை இப்படி இருந்த நல்லதான் இருக்கும்…

tejas
தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில், 13 அதிநவீன பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. பல நவீன வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த ரயில் அதிகபட்சமாக, மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.

இந்த ரயில் சேவையை, மே, 22ம் தேதி ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைத்தார். கோவா மற்றும் மகாராஷ்டிராவில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம். எனவே, தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, இந்த ரயில் மும்பை – கோவா இடையிலான 750 கி.மீ., தூரத்தை, 8.30 மணி நேரத்தில் கடந்து விடும். ஆனால், புதிய அட்டவணைபடி இந்த ரயில், வாரத்திற்கு மூன்று நாட்கள் மும்பையில் இருந்து இயக்கப்படும். அடுத்த நாள் கோவாவில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும்.

புதிய அட்டவணைபடி இந்த ரயில் கோவாவில் இருந்து நேற்று (ஜூன், 11), காலை, 10.30 மணிக்கு புறப்பட்டது. அதாவது வழக்கமான நேரத்தை விட, மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. எனினும், 750 கி.மீ., தூரத்தில் உள்ள மும்பையை, இரவு, 7.44 மணிக்கு சென்றடைந்தது. வழக்கமான நேரத்தை விட, ஒரு நிமிடத்திற்கு முன்பாகவே மும்பை சென்று விட்டது. இந்த வழித்தடத்தில், இந்த ரயில் மணிக்கு 153 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டதால், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

Leave a Response