இங்கேயும் தீ விபத்தா…

elc
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த தகவலானது தீயணைப்பு மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்தை அடுத்து அலுவலகத்தில் இருந்த தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த தீயை அணைக்கும் பணியில் நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தமிழக சட்ட அமைச்சர் சிவி சண்முகம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வந்து சசிகலா தரப்பிலான 1,.50 லட்ச பக்கங்கள் கொண்ட ஆவணத்தை தாக்கல் செய்தார் எம்பது குறிப்பிட தக்கது.

Leave a Response