மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பிரசன்னா வெங்கடேஸ்வரர்…

thirupathi_ursavam_3173820f
ஆந்திர மாநிலம் அப்பலய்ய குண்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று உற்சவர் மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்பதி அருகே அப்பலய்ய குண்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் வருடாந்திர பிரம் மோற்சவ விழா அண்மையில் தொடங்கியது. 5-ம் நாளான நேற்று உற்சவ மூர்த்தி மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது நான்கு மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ என விண்ணதிர பக்தி முழக்கம் எழுப்பி, சுவாமியை தரிசித்தனர்.

Leave a Response