கர்ப்பிணிக்கும் பாலியல் தொல்லையா…

pragna2
சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் கணவருடன் வாக்கிங் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பீஷ்மராஜ், இவருடைய மனைவி சந்தியா. இவர் 7 மாத கர்ப்பிணியா இருப்பதால் கணவருடன் திருவான்மியூர் கலாஷேத்ரா காலனி வழியாக நடைப்பயிற்சி சென்றார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் சந்தியாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகவும், பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, சந்தியா புகார் அளித்ததன் பேரில், திருவான்மியூர் காவல்நிலையத்தினர், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Leave a Response