‘காற்று வெளியிடை’ பட நாயகனை இயக்கும் பாண்டியராஜ்…

pandiyaraj2
‘பசங்க 2’, ‘கதகளி’ மற்றும் ‘இது நம்ம ஆளு’ ஆகிய மூன்று படங்களில் இடைவிடாது பணியாற்றினார் இயக்குநர் பாண்டிராஜ். 3 படங்களுமே குறைந்த இடைவெளியில் வெளியானது. இதனைத் தொடர்ந்து சிறு இடைவெளி விட்டு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த இடைவெளியில் தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வள்ளிகாந்த் இயக்கியுள்ள ‘செம’ படத்தை ரவிச்சந்திரனுடன் இணைந்து தயாரித்துள்ளார். ஜுலையில் இப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பாண்டிராஜ் எழுதியுள்ள கதையில் நடிக்க கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த அறிவிப்பை ‘செம’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 2டி நிறுவனத்தின் ராஜசேகர் பாண்டியன் அறிவித்தார்.

விரைவில் இப்படத்தில் கார்த்தியுடன் நடிக்கவிருப்பவர்கள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

Leave a Response