பார்வையற்றோருக்கு ஸ்மார்ட் ஊன்றுகோள் வழங்கும் திட்டத்தில் 5000-லிருந்து 10,000 ஆக உயர்த்தியுள்ளார் முதல்வர்…

saamy
தலைப்பு பார்த்ததும் தெரிஞ்சிருக்கும் என்ன சொல்ல வரன்னு. இருந்தாலும் நம்ம முதல்வர் எடப்பாடி என்ன மாத்தி இருக்காறு வேற என்ன பண்ணி இருக்காங்க இப்படி மேலும் தெரிஞ்சிக்க வாங்க படிக்கலாம்.

அதாவது பார்வையற்றோர் நலனை கருத்தில் கொண்டு பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்கள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், 2016-17ஆம் நிதியாண்டில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மேலும் பயனளிக்கக் கூடிய வகையில் (smart cane) நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள் 5,000 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டு நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் நடக்கும் போது நான்கு அல்லது ஐந்தடிக்கு முன்பாக இருக்கும் தடைகளை smart cane -லிருந்து வரும் அதிர்வுகளின் அடிப்படையில் முன்கூட்டியே உணர்ந்து சுலபமாக செயல்பட ஏதுவாக இந்த நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள் பயன்படுகின்றன.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உயர்தொழில்நுட்பம் கூடிய ஒளிரும் மடக்கு குச்சிகளை 5000-லிருந்து 10,000 ஆக உயர்த்தி வழங்கிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, 2017-18ஆம் நிதியாண்டில் 10,000 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உயர்தொழில்நுட்ப ஊன்றுகோல் வழங்கிட 3 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது

Leave a Response