அருணாச்சல பிரதேசத்தில் மஞ்சு கா தில்லா என்ற பகுதியில் இருந்து 900 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை திருடப்பட்டது அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் சிலையை திருடியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பழமையான புத்தர் சிலை மீட்கப்பட்டது.