மத்திய அரசு தடைக்கு பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு…

kush
நம்ம குஷ்பு எப்போ அரசியல் வந்தாங்களோ அப்போவே அவங்க திடீர் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே குஷ்பு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் சில சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர் இன்று கூறிய கருத்தும் அதே மாதிரி இருக்கு. அது என்னனு வாங்க பாப்போம்.

இறைச்சிக்காக கால்நடைக்களை விற்கக் கூடாது என்று மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. மத்திய அரசின் இந்த முடிவிற்கு தென் இந்தியாவில் பலத்த ஏதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தநிலையில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்குறித்து குஷ்பு கூறும்போது, ” மக்கள் என்ன உண்ண வேண்டும் என்பதை அரசு சொல்லக்கூடாது. என்னுடைய தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு அல்ல. இந்தியா தான் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முண்ணனி வகிக்கிறது.

தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதால் அதை யாரும் உண்ணாமல் இருக்க முடியுமா?, தோல் செருப்புகள் அணியாமல் வெறுங்காலில் நடக்க முடியுமா?, பேண்டு பெல்ட்டுக்கு பதில் பாவாடை நாடாவை கட்டிக் கொள்ள முடியுமா?” என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

Leave a Response