தமிழகத்தில் பல இடங்களில் இன்று கனமழை…

vaanil
இன்று அதிசியம் ஒன்று நடந்துள்ளது அது என்னனா இன்னைக்கு நம் தமிழகத்தில் மழை பெய்துள்ளது. அதுவும் வானிலை அறிக்கை மையம் சொன்ன மாதிரி வந்து இருக்கு இன்னும் ஆச்சர்யம் ஊட்டுகிறது. ஏன்னா நம்ம வானிலை அறிக்கை மையம் மழை பெய்யும் என்றால் வெயில் அடிக்கும். வெயில் அடிக்கும் என்றால் மழை பெய்யும். சரி செய்திக்கு போவோம் வாங்க.

அதாவது திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.வெப்ப சலனம் காரணம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பத்தின் தாக்கம் குறையும், ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

இந்நிலையில் இன்று, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், இறையூர், பாய்ச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதே போன்று திருவள்ளூர் மாவட்டம் கே.கே.சத்திரம், ராமஞ்சேரி புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response