இன்று சென்னையில் சாரல் மழை…

rain
நம்ம சென்னையில இருக்குறவங்க எல்லாம் பாவம் செய்தவர்கள் சொல்லும் அளவுக்கு. நம்ம மாவட்டத்தை தவிர வேலூர் ,திருவள்ளூர், போன்ற மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் மேகங்கள் கருணை காமித்து இன்று காலையில் சாரல் தூவியது.

அதவாது கடந்த சில நாட்களாக கோடை சுட்டெரித்து வந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. மேலும், மயிலாப்பூர், ராயப்பேட்டை, சாந்தோம், எண்ணூர், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்த திடீர் மழை காரணமாக குளிர்ந்த வானிலை நிலவுவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் தென் மற்றும் உள்மாவட்டங்களில் குறைந்து குளிர்ந்த வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இமய மலைத் தொடரில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களால் வட மாநிலங்களில் விரைவில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை தெரிவித்துள்ளது.

Leave a Response