மீண்டும் ஒரு நிர்பய சம்பவம் நடந்துள்ளது…

nirbaya
டெல்லி மருத்துவக்கல்லுரியில் மருத்துவம் பயிலும் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் கடந்த வாரம், குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட். இந்நிலையில் அறியான மாநிலம் ரோஹ்தக் பகுதியில் இதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்சியடைய வைத்துள்ளது. 23 வயது இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஓராண்டாக, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். அந்த இளைஞரின் குடும்பத்தினரும் வற்புற்றுத்தி வந்துள்ளனர். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ள அப்பெண் மறுத்துள்ளார். இதனால் அவரை பழிவாங்கும் நோக்கத்துடன், அந்த இளைஞர், தனது நண்பருடன் சேர்ந்து அப்பெண் கடத்திச் சென்று மது அருந்தவைத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அனந்த பெண்ணின் உடல் உறுப்புகளை கூர்மையான ஆயுதங்களால் துண்டு துண்டுகளாக வெட்டி. யாரும் அந்த பெண்ணின் அடையாளங்களை கண்டுகொள்ள முடியாத அளவிற்கு பெண்ணின் தையை கற்களை கொண்டு நசுக்கி சிதைத்துள்ளார். தொடர்ந்து அப்பெண்ணின் உடல் மீது காரையும் ஏற்றி உள்ளார். உடல் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு, சில பாகங்களை நாய்கள் குதறி தின்ற நிலையில் 4 நாட்களுக்கு பிறகு அப்பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நிர்பயாவை விட கொடூரமான முறையில் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் எனவும் அப்பெண்ணின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Response