ப.ரஞ்சித் அவர்கள் இயக்கத்தில், ரஜினிகாந்த் ஒரு பிரபல கடத்தல்காரராகவும், தாதாவாகவும் மும்பையில் சில வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒரு சில நாளிதழ்களிலும், இணையதளங்களிலும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இதற்கு எதிர்ப்பு தெறிவித்து, காலம்சென்ற ஹாஜி மஸ்தான் அவர்களுடைய வளர்ப்பு மகனான சுந்தர் சேகர் மிஸ்ரா என்பவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அதில், ஹாஜி மஸ்தான் பற்றிய கதையில் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பதாகவும் அதில் ஹாஜி மஸ்தான் கடதல்காரராகவும், தாதாவாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளதாகவும் தான் செய்திதாள்களில் படித்ததாகவும் தெரிவித்திருந்தார். ஹாஜி மஸ்தான் அந்த நாளிதழ்களில் குரிப்பிட்டுள்ளப்படி கடதல்காரறோ அல்லது தாதாவோ கிடையாது. அவர் ஒரு பிரபல தொழிலதிபர் மட்டுமே எனவும் தெரிவித்திருந்தார். எனவே ஹாஜி மஸ்தான் அவர்களை பற்றி அந்த படத்தில் தவறாக சித்தரிக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். மீறி அவ்வாறு ஹாஜி மஸ்தானை தவறாக சித்தரித்தால், படக்குழுவின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார் சுந்தர் சேகர் மிஸ்ரா.
இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இப்படத்தை தயாரிக்கும் ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான “வுண்டர்பார் பிலிம் பாக்டரி” நிறுவனத்திலிருந்து ஒரு பத்திரிகை அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரவித்துள்ளதாவது. நாங்கள் தயாரித்து வரும் இப்படம் (Production NO: 12) மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது.
குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் திரு.ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.
இது சம்பந்தமாக படத்தின் இயக்குனர் திரு பா. இரஞ்சித் அவர்கள், தன்னை தொடர்பு கொண்ட பத்திரிக்கையாளர்களிடம் இது “ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதையல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.