பிளஸ் 2 தேர்வு : சிறைக் கைதிகள் எழுதிய தேர்வு முடிவில் 85 பேர் தேர்ச்சி…

prison

அனைவரும் மாணவர்கள் எழுதிய தேர்வு பற்றியும் மற்றும் தேர்ச்சி விகிதத்தை பார்த்து கொண்டு இருக்கும் இந்நேரத்தில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட தேர்வு எழுதி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 92.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 92 சிறைக்கைதிகள் பிளஸ் 2 தேர்வெழுதினர். அதில், 85 கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response