பிளாஸ்டிக் பாட்டில்களில் பஸ் ஸ்டாப்!..

recycled-bus-stop-hyderabad_650x400_71494415866இந்தியாவில், ’தூய்மை இந்தியா’ திட்டத்துடன் ’மறுசுழற்சி இந்தியா’ என்ற திட்டமும் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி, பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் உபயோகத்துக்கு வரும்.

இந்தியா முழுவதும் அதிகமாக பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுத்தும் நிலையில் அதை மறுசுழற்சி செய்ய அரசு இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் ஹைதரபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் பஸ் ஸ்டாப்பை அமைத்து, ‘’மறுசுழற்சி இந்தியா’’ திட்டத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

இந்த பஸ் ஸ்டாப் உப்பாலின் ஸ்வரூப்நகர் காலணியில் உள்ள 10வது தெருவில் உள்ளது. 1000 ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு 8×4 அடி அளவுக்கு இந்தப் பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. பாட்டில்களுக்கு இடையே ஓட்டை போடப்பட்டுள்ளது. இதனால் காற்று எளிதாக உள்ளே செல்வதால் அதன் கீழ் இருப்பவர்களுக்கு புழுக்கம் இருக்காது என தெரிவித்துள்ளனர்.
bus
இதை சேதப்படுத்தாமல் இருந்தால், இந்த பஸ் ஸ்டாப் பல வருடங்களுக்கு அப்படியே இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Response