திருமணமண்டபம் இடிந்து விழுந்ததில் 23 பேர் பலி….

rajas
நம் நாட்டில் அதிக பழைய கட்டிடம் பயன்படுத்தி வருகின்றனர். அதன் விளைவுகள் மக்களுக்கு தெரிவதில்லை. அப்படித்தான் ராஜஸ்தானில் ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத்பூரில் உள்ள திருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியானார்கள். 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 23 பேர் பலியாயினார்கள். இவர்களில் 11 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள் மற்றும் பேர் 4 குழந்தைகள். மேலும் படுகாயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டார்கள்.
விபத்துக்குள்ளான கட்டிடம் மிக பழமையாநது என்றும் பலத்த காற்றின் காரணமாக இந்த விபத்து நிகழ்த்திருக்க வாய்ப்புள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Response