+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது…

exam221113
தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்நிலையில் புதிய முயற்சியாக பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி முன் கூட்டியே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனால் அறிவிக்கப்பட்டது. இதன்படி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளையும், பத்தாம் வகுப்பு தேர்வுக் முடிவுகள் வரும் 19-ஆம் தேதியும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் அறிவித்த தேதியில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகுமா? என்ற குழப்பம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த நிலையில், நாளை திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும் என நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் தேர்வு எழுதிய அனைத்து மாணவ,மாணவிகளின் செல்போன் எண்களுக்கும் அவர்களுடைய தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வழியாக அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் இணையதளம் வழியாக தேர்வு முடிவுகளை பார்ப்பதில் எந்த தடங்கலும் இந்த முறை ஏற்படாது எனவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response