விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன…

jet air
இன்று ஜெட் ஏர்வேஸ் இரண்டு விமானங்கள் ஓடு பாதையில் ஓடும் பொழுது விபத்துக்கு உள்ளாகின. இந்த விபத்து அங்கு சில சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது என்ன வென்றால்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் நேற்று புறப்பட தயாராக இருந்தன. ஸ்ரீநகர் செல்லும் 9W 603 விமானம், பாட்னா செல்லும் 9W 730 விமானம் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.

அவை புறப்படத் தயாராகி ஓடு பாதைக்கு சென்றன. அப்போது எதிர்பாராதவிதமாக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. உடனடியாக விமானங்கள் நிறுத்தப்பட்டு அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விரைந்து வந்த மீட்பு குழுவினர் பயணிகள் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

அந்த விபத்தில் யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து விமானங்கள் மீண்டும் பார்க்கிங் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் விமானப் பொறியாளர்கள் விமானங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக உரிய அறிக்கை வெளியிடப்படும் என்று ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Response