அழுத கண்களோடு வெளியே வந்த பெண்கள்…

Enga Amma Rani
தன்சிகா நடிப்பில், பாணி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம், “எங்க அம்மா ராணி”. “பாகுபலி” என்ற பிரமாண்ட திரைப்பட இந்தியா முழுவதும் வெளிவந்து வெற்றிகரமான ஓடும் காரணத்தினால், “எங்க அம்மா ராணி” திரைப்படத்திற்கு குறைவான திரைகளே கிடைத்தன. இருப்பினும் இப்படம் திரையிடப்பட்ட இடங்களில்லெல்லாம் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் தாய், மகள்கள் பற்றிய சென்டிமென்ட் படம் என்பதால், குறிப்பாக புறநகரங்களில் இப்படத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. படத்தை பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து வெளியே வரும் பெண்கள் படத்தில் இடம்பெற்றிருக்கும் தன்சிகா மற்றும் அவருடைய மகள்களின் கதாபாத்திரங்களை நினைத்து அழுத கண்களோடு வெளியில் வருகின்றனர்.

மொத்தத்தில் “எங்க அம்மா ராணி” திரையிடப்பட்ட இடங்களிலெல்லாம் வெற்றி வாகை சூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response