மதுரையில் புதிய பாலங்களுக்கு மறைந்த அ.தி.மு.க. தலைவர்களின் பெயர் ….

jayam
மதுரையில் கடந்த சில மாதங்களாக கட்டிக்கொண்டு இருந்த இருபாலங்கள் முடிவுபெற்று திறக்க இருக்கும் இந்நிலையில் மறைந்து போன முன்னால் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை சூட்டவுள்ளனர். இதன்படி மதுரை மாநகராட்சி அனுமதி கொடுத்துள்ளது.

அருள்தாஸ்புரம் – ஆரப்பாளையம் பாலத்திற்கு ஜெயலலிதா பெயரையும், சிம்மக்கல் – கோரிப்பாளையத்தை இணைக்கும் பாலத்திற்கு எம்.ஜி.ஆர்.பெயரையும் சூட்ட உள்ளனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை சென்று பாலத்தை திறக்கவுள்ளார்.

முன்னதாக இந்த பாலங்களுக்கு மறைந்த முதல்வர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response