உயிரோடு காரிலேயே எரிந்த பெண்..!

erintha
ஆந்திராவைச் சேர்ந்த நாகமணி மற்றும் அவரது கணவர் ரமணா ஆகியோர் புருஷோட்டபுரம் என்ற தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டு, காரில் விஜயவாடா திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை விசாகப்பட்டினம் அருகிலுள்ள ராயவரம் மண்டல் என்ற பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது,கார் திடீரென தீப்பிடித்தது. இதில் கார் மளமளவென எரியத் துவங்கியது. விபத்து காரணமாக கார் கதவுகள் வெளிப்புறமாக பூட்டிக் கொண்டதால், இருவராலும் தப்பித்து வெளியே வர முடியவில்லை.

கார் தீப்பற்றி எரிவதை பார்த்த அருகிலிருந்தவர்கள், நாகமணியின் கணவர் ரமணாவை காரிலிருந்து வெளியே இழுத்து காப்பற்றினர். ஆனால் நாகமணியை காப்பாற்றுவதற்கு முன்னர், கார் முழுவதும் தீ பரவியிருந்தது. இதனால் காருக்குள் இருந்த நாகமணி தீயில் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

காரில் தீப்பற்றியவுடன் உதவி கோரி உறவினர்களுக்கு நாகமணியின் கணவர் போன் செய்துள்ளாரே தவிர, போலிசையோ, ஆம்புலன்சுக்கோ உதவிக்கு அழைக்கவில்லை. எனவே இந்த விபத்தில் ரமணா மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

Leave a Response