புழல் சிறை, கைதிக்கு மாரடைப்பு, திடீர் மரணம்!

puzhal
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர் முத்து என்கிற வேம்புலி (43). இவர் கடந்த 2009ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்களம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். மார்ச் 5ஆம் தேதி சிறையில் இருந்த காவலர்களிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக முத்து கூறியதை அடுத்து சிறையில் இருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர.

மார்ச் 30ஆம் தேதி கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அரசு ஸ்லேன்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்து மருத்துவமனையில் உயிரிழந்தார். முத்துவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Response