மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள இன்னொரு அமலா

oru kanavu pola
ஒரு கனவு போல’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை அமலா ரோஸ்குரியன். இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. நல்ல கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நடித்திருக்கும் அமலா ரோஸ்குரியன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது. தனது அறிமுகம் குறித்து அமலா ரோஸ்குரியன் கூறியதாவது:

‘‘கேரளாவில் உள்ள கோட்டையம் தான் எனது சொந்த ஊர். குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்துள்ளேன். துல்கர் சல்மான நடித்த ‘தீவிரம்’ எனும் மலையாளப் படத்தில் வில்லன் அனுமோகன் மனைவியாக நடித்திருந்தேன்.

பின்னர் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர் அழகப்பன் மூலமாக ‘ஒரு கனவு போல’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் நடிகர் ராமகிருஷ்ணன் மனனவியாக நடித்திருக்கிறேன். ஒரு விநாடி சபலத்துக்கு ஆளான ஒரு குடும்ப பெண்ணின் கேரக்டர்.படம் பார்த்த எல்லோரும் மனதார பாராட்டினார்கள். என்னை பூர்ணிமா மேடம், பிரியா மணி மேடம், சித்தாரா மேடம் மாதிரி இருப்பதாக சொன்னார்கள்.

Leave a Response