சென்னை ரயில் நிலையத்தில் ”மர்ம பையிலிருந்து கிளம்பிய புகையாழ்” பரபரப்பு..!

thambaram
சென்னையில் தாம்பரத்தை அடுத்துள்ள தாம்பரம் சானிட்டோரியம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையில், திடீரென புகை கிளம்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான தாம்பரம் ரயில் நிலையத்திற்கு அடுத்ததாக தாம்பரம் சானிட்டோரியம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. மின்சார ரயில்கள் நின்று செல்லும் இந்த ரயில் நிலையத்தில், எப்போதும் அதிக அளவில் பயணிகள் கூட்டம் இருக்கும்.

இந்நிலையில் இன்று அந்த ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த கருப்பு நிற மர்ம பை ஒன்றிலிருந்து திடீரென புகை வரத் துவங்கியது. இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவலளித்தனர். வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், அந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் செல்போனுக்கு சார்ஜ் செய்ய பயன்படுத்தும், 300 பவர் பேங்குகள் இருந்தது தெரியவந்தது. அந்த பவர் பேங்கில் ஒன்று எரிந்ததால்தான், புகை ஏற்பட்டதாக வெடிகுண்டு நிபுணர்கள் விளக்கமளித்தனர்.

இந்த சம்பவத்தினால் பல மின்சார ரயில்களும், சில பயணிகள் ரயில்களும் தாமதமாகின.

Leave a Response