கடலில் குதித்து நண்பர்களை காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவர் பலி!…

kadal
சென்னை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களை கடல் அலை அடித்துச் சென்றதில், நண்பர்களை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் சென்னை பெரவள்ளூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் கவுதம் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வு முடிந்து நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு விளையாடச் சென்றுள்ளார்.

கவுதம், நிதின் ஜோசப், நிக்கில், தீபக், இமானுவேல் ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை பகுதியில் கடலில் இறங்கி விளையாடிய போது, திடீரென்று நிதின் ஜோசப், நிக்கில் அலையில் சிக்கினர். அவர்களை காப்பாறறும் முயற்சியில் ஈடுபட்ட கவுதமும் , அருகில் இருந்தவர்களும் கடலில் தத்தளித்த இருவரையும் மீட்டனர்.

ஆனால், சற்றும் எதிர்ப்பாராதவிதமாக நண்பர்களை காப்பாற்ற சென்ற மாணவர் கவுதம் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response