டி.டி.வி. தினகரன் இன்று மூன்றாவது நாளாக வாக்கு சேகரிக்க ஆர்.கே நகரில் மக்களை சந்தித்து கொண்டிருக்கிரார்!

dinakaran
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைவையடுத்து காலியான அவரது ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஆளும்கட்சி ஆதரவு வேட்பாளரான டி.டி.வி. தினகரன் நேற்று முன்தினம் முதல் பிரசாரத்தை தொடங்கினார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் ‘தொப்பி’ சின்னத்தில் அவர் ஆதரவு கேட்டு வருகிறார்.

புதிய சின்னம் ‘தொப்பி’ வாக்காளர்கள் மனதில் இடம் பெற வேண்டும் என்பதற்காக பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்கள், பெண்கள் தொப்பி அணிந்து கொண்டு. ஆர்.கே.நகர் தொகுதி மக்களை வீடு வீடாக சந்திக்க இன்று 3வது நாளாக டி.டி.வி. தினகரன் அனல் பறக்கும் பிரசாரத்தில் வாக்கு சேகரித்து கொன்டிருக்கிறார்.

Leave a Response