ஸ்மித்திற்கு கோலி கொடுத்த சரியான பதிலடி!..

kholi
இந்திய கேப்டன் கோலி என்னை சீண்டியது பத்தாமல், எனது பிசியோ பேட்ரிக்கை சீண்டியது சுத்த மரியாதையற்ற செயல் என்று ஸ்மித்திற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் ’டிரா’வில் முடிந்தது.இந்நிலையில் ராஞ்சி டெஸ்டின் முதல் நாளில் பவுண்டரி தடுக்கும் முயற்சியில் இந்திய கேப்டன் கோலிக்கு வலது தோள் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதை ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில் குத்தி குத்தி காட்டிக்கொண்டே இருந்தனர்.

‘களத்தில் விளையாடும் போது காயமடைவது மிகவும் சகஜமான ஒன்று. இதை கேலி செய்ய வேண்டிய அவசியமில்லை. தவிர, ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லைமீறி, எனது பிஸியோ பேட்ரிக்கையும் சேர்த்து நக்கல் செய்தனர். அவர் அவரது வேலையைத்தான் செய்கிறார். அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என நீங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்’என்று கேப்டன் கோலி கூறினார்.

‘இது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது’என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார். நாங்கள் யாரும் எதுவும் செய்யவில்லை. பேட்ரிக் விஷயத்தில் விராட் சொன்னதுக்கு அப்படியே நேர் எதிராகவே நாங்கள் இருந்தோம். காயமடைந்த வீரரை விரைவாக குணமடையச்செய்து மீண்டும் களத்தில் விளையாட அனுப்பிய தங்கமான பிஸியோவை நாங்கள் ஏன் கேலி செய்ய வேண்டும்,’என்று கூறியிருக்கிறார்.

Leave a Response