செம்மரம் கடத்ததியதாக 6 தமிழர்கள் கைது!..

red sandel
செம்மரம் கடத்தப்பட்டதாக வேலூரை சேர்ந்த 5 பேர் உட்பட தமிழர்கள் 6 பேரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டும் விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக தமிழர்கள் பலர் கைது செய்யப்படுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

தமிழர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என ஆந்திர காவல்துறை சிறையில் அடைப்பதும், குற்ற மற்றவர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என காவல்துறை சிறை பிடிக்கிறது என்றும் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எனினும், செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே செம்மரம் கடத்தியதாக வேலூரை சேர்ந்த 5 பேர் உட்பட தமிழர்கள் 6 பேரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Response