பாலியல் தொல்லை வீட்டில் தனியாக இருந்த 16 வயது பெண்ணுக்கு!

rape145
சென்னையை அடுத்துள்ள மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 16 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தின் கீழ் கூலி தொழிலாளி ராஜேஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் ராஜேஷை தேடி வருகின்றனர்.

சென்னை புறநகரான மீஞ்சூர் அருகே உள்ளது அலுர். இங்கு 9ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தனது படிப்பை தொடர முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று இந்தப் பெண் தனியாக வீட்டில் இருந்ததை பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்த கூலி தொழிலாளி ராஜேஷ் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் ராஜேஷ் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். வேலைக்குச் சென்று இருந்த அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து விரைந்து வந்த பெற்றோர், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரையடுத்து தப்பியோடிய ராஜேஷின் மீது பாலியல் பலாத்காரம், அத்துமீறி நுழைந்த குற்றம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொன்னேரி அரசு மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினர் ராஜேஷை தேடி வருகின்றனர்.

Leave a Response