தமிழ் திரையுலகில் சில தினங்களுக்கு முன் வந்த “துருவங்கள் பதினாறு”திரைப்படம் அனைவரும் பார்த்திருப்பீர்கள். இத்திரைப்படம் 22வயதான இளைஞன் கார்த்திக் நரேன் தமிழில் இயக்கி தயாரித்துள்ளார். இத்திரைப்படம் தமிழில் ஒரு வித்தியாசமான கதைக்கரு கொண்டுள்ளாதாகும்.இந்த படத்தின் கதாநாயகன் ரகுமான் அவர்களுக்கு நள்ள மதிப்புதந்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து கேரளாவில் சமூக வலைத்தளங்களிழும் நடிகர் ரகுமானின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பினை தொடர்ந்து துருவங்கள் பதினாறு திரைபடத்தின் மொத்த கேரளா உரிமையை தமிழகத்தை சேர்ந்த 22 வயதான இளைஞன் “Writer Imagination ” உரிமையாளர் மஹா விஷ்ணு வாங்கியுள்ளார். இவர் வருகிற மார்ச் 10 ஆம் தேதி மஹா விஷ்ணு மற்றும் கேரளாவின் முக்கிய வினியோகஸ்தரான ஷிபு தமீன் ஆகிய இருவரும் இணைந்து கேரளாவில் மிக முக்கியமான திரையரங்குகளில் துருவங்கள் பதினாறு திரைப்படத்தை வெளியிடவுள்ளனர்.இந்த போஸ்டர்களை பெருமளவில் சமூக வலை தளங்களில் வளம் வந்த வண்ணம் உள்ளன.